Monday, May 4, 2020

தமிழ் காட்டும் நெறி

புறநானூறு  (4)

வாள்,வலந்தர, மறுப் பட்டன
செவ் வானத்து வனப்புப் போன்றன!
தாள், களங்கொளக், கழல் பறைந்தன
கொல் ஏற்றின் மருப்புப் போன்றன;
தோல்; துவைத்து அம்பின் துனைதோன்றுவ, 5
நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன;
மாவே, எறிபதத்தான் இடங் காட்டக்,
கறுழ் பொருத செவ் வாயான்,
எருத்து வவ்விய புலி போன்றன;
களிறே, கதவு எறியாச், சிவந்து, உராஅய், 10
நுதி மழுங்கிய வெண் கோட்டான்,
உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன;
நீயே, அலங்கு உளைப் பரீஇ இவுளிப்
பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி,
மாக் கடல் நிவந் தெழுதரும் 15
செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ!
அனையை ஆகன் மாறே,
தாயில் தூவாக் குழவி போல,
ஓவாது கூஉம், நின் உடற்றியோர் நாடே.
                 - பரணர்.

திணை : வஞ்சித்திணை.

துறை : கொற்ற வள்ளை

பாடல் கூறும் நெறி

*உன் நிமிர்ந்த மார்க் கொண்டு பகைவர்களை விரட்டு.
*பகைவர்களை உன் எதிரில் வாலாட்ட விடாதே. 
*சினம் கொண்ட சிங்கத்தின் குணம் கொள்.
*எதையும் கண்டு அஞ்சாதே.


பாடல் குறிப்பு 

பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு  (எட்டுத்தொகை).பாடலை பாடியவர் பரணர் (4). 

தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளை பின்பற்றுவோம். தமிழிற்க்கு மேலும் அழகு சேர்ப்போம்.

வளர்க தமிழ்!           வாழ்க தமிழ்!!

No comments:

Post a Comment