தமிழ் காட்டும் நெறி
புறநானூறு (199)
பாடல்:
*******
கடவுள் ஆலத்துத் தடவுச்சினைப் பல்பழம்
நெருநல் உண்டனம் என்னாது, பின்னும்
செலவுஆ னாவே, கலிகொள் புள்ளினம்;
அனையர் வாழியோ இரவலர்; அவரைப்
புரவுஎதிர் கொள்ளும் பெருஞ்செய் ஆடவர்
உடைமை ஆகும், அவர் உடைமை;
அவர் இன்மை ஆகும், அவர் இன்மையே.
- பெரும்பதுமனார்
திணை: பாடாண் திணை
துறை: பரிசில் கடா நிலை துறை
பாடல் கூறும் நெறி:
*********************
* பழுத்திருக்கும் ஆலம்பழம் நேற்று உண்டோமே என்று அந்த மரத்தை நாடிப் பறவைகள் மறுநாள் வராமல் இருப்பதில்லை.
* அதுபோலக் கொடைவழங்கக் காத்திருக்கும் செயல்வீரனிடம் இரவலர் வருவது அவர்களிடம் உள்ள இல்லாமையே.
* எனவே உடையவன் தன் உடைமையை இல்லாதவர்களின் உடைமையாக ஆக்கித் தரவேண்டும். அவரது இல்லாமையைத் தன் இல்லாமையாக எண்ணிக்கொள்ள வேண்டும்.
பாடல் குறிப்பு:
***************
இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு (எட்டுத்தொகை). இப்பாடலை இயற்றியவர் பெரும்பதுமனார். பாடல் எண் 199. இந்நூலில் இடம் பெற்றுள்ள பாடல்கள் புறப்பொருள் சார்ந்தவையாகும்.
தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றுவோம். தமிழிற்கு மேலும் அழகு சேர்ப்போம்!
வளர்க தமிழ்! வாழ்க தமிழ்!
புறநானூறு (199)
பாடல்:
*******
கடவுள் ஆலத்துத் தடவுச்சினைப் பல்பழம்
நெருநல் உண்டனம் என்னாது, பின்னும்
செலவுஆ னாவே, கலிகொள் புள்ளினம்;
அனையர் வாழியோ இரவலர்; அவரைப்
புரவுஎதிர் கொள்ளும் பெருஞ்செய் ஆடவர்
உடைமை ஆகும், அவர் உடைமை;
அவர் இன்மை ஆகும், அவர் இன்மையே.
- பெரும்பதுமனார்
திணை: பாடாண் திணை
துறை: பரிசில் கடா நிலை துறை
பாடல் கூறும் நெறி:
*********************
* பழுத்திருக்கும் ஆலம்பழம் நேற்று உண்டோமே என்று அந்த மரத்தை நாடிப் பறவைகள் மறுநாள் வராமல் இருப்பதில்லை.
* அதுபோலக் கொடைவழங்கக் காத்திருக்கும் செயல்வீரனிடம் இரவலர் வருவது அவர்களிடம் உள்ள இல்லாமையே.
* எனவே உடையவன் தன் உடைமையை இல்லாதவர்களின் உடைமையாக ஆக்கித் தரவேண்டும். அவரது இல்லாமையைத் தன் இல்லாமையாக எண்ணிக்கொள்ள வேண்டும்.
பாடல் குறிப்பு:
***************
இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு (எட்டுத்தொகை). இப்பாடலை இயற்றியவர் பெரும்பதுமனார். பாடல் எண் 199. இந்நூலில் இடம் பெற்றுள்ள பாடல்கள் புறப்பொருள் சார்ந்தவையாகும்.
தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றுவோம். தமிழிற்கு மேலும் அழகு சேர்ப்போம்!
வளர்க தமிழ்! வாழ்க தமிழ்!
கொடையது தனதன்று வரியோர் ஆக்கமாய்
ReplyDeleteகாத்து நிற்பா ன்கோ.
வடலூர்ஜெகன்