Saturday, April 11, 2020

தமிழ் காட்டும் நெறி

தமிழ் காட்டும் நெறி

புறநானூறு (192)
         
பாடல்

யாதும் ஊரே, யாவரும் கேளிர்;
தீதும், நன்றும், பிறர் தர வாரா;
நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;
சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்
இன்னாது என்றலும் இலமே! மின்னொடு
வானம் தண் துளி தலைஇ ஆனாது,
கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே!
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!


              - கணியன் பூங்குன்றனார்

திணை : பொதுவியல்திணை.

துறை : பொருண்மொழிக் காஞ்சித் துறை.

பாடல் கூறும் நெறி

*எல்லா ஊரும் எனக்கு சொந்தம் என கருத வேண்டும்.
*உலகில் உள்ள அனைத்து உயிர்களும் என் உறவுகளே என கருத வேண்டும்.
*தீமையையும், நன்மையையும் யாரும் தர வரமாட்டார்கள்.
*இறப்பு இயல்பான நிகழ்வு.
*வாழ்வு சிறப்பும் இல்லை.
*அறிஞர்களின் அறிவுரையாலே வாழ்வின் இலக்கணத்தை அறிந்தோம்.


பாடல் குறிப்பு

பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு  (எட்டுத்தொகை).
பாடலை இயற்றியவர் கணியன் பூங்குன்றனார். பாடல் எண் 192.புறம் பற்றிய நானூறு பாடல்களை கொண்ட நூல்.

தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளை பின்பற்றுவோம். தமிழிற்க்கு மேலும் அழகு சேர்ப்போம்.

வளர்க தமிழ்!           வாழ்க தமிழ்!!

1 comment: