Friday, April 10, 2020

தமிழ் காட்டும் நெறி

தமிழ் காட்டும் நெறி

குறுந்தொகை (146)
       
பாடல்

அம்ம வாழி தோழி நம்மூர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லா
தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதலவர்
நன்றுநன் றென்னும் மாக்களோடு
இன்றுபெரிது என்னும் ஆங்கணத் தவையே.

               - வெள்ளிவீதியார்

திணை : குறிஞ்சித்திணை

துறை : தலைவன் தலைவியை மனம் பேசுகையில் தலைவனிடத்து தம்மை சேர்ப்பாரா? என கவலையில் தலைவி இருக்கும் வேளையில் தோழி தலைவிக்கு ஆறுதல் அளிப்பது.

பாடல் கூறும் நெறி

*நம்முடைய இந்த காலத்தில் வரதட்சணை ஆண் மகனை பெற்றெடுத்த குடும்பத்தார்கள் பெறுகிறார்கள் ஆனால் அது வழக்கம் அல்ல.
*ஆண் மகன் சீர்களை கொண்டு சென்று பெண்னை பெற்றுக் கொள்வது தான் வழக்கம்.
*அதற்கான நோக்கம் பெண்னை சிறப்பாக பார்த்துக்கொள்ள பொருள் போதுமான அளவு உள்ளதா என்பதை சோதிக்கவே.
*வரதட்சணை வழக்கத்தின் நோக்கம் புரிந்து செயல்படுவோம்.

பாடல் குறிப்பு

பாடல் இடம்பெற்றுள்ள நூல் குறுந்தொகை (எட்டுத்தொகை).
பாடலை இயற்றியவர் வெள்ளிவீதியார். சங்க கால பெண்பாற் புலவர்களில் ஒருவர்.பாடல் எண் 146. பாவகை நேரிசை ஆசிரியர்ப்பா.

தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளை பின்பற்றுவோம். தமிழிற்க்கு மேலும் அழகு சேர்ப்போம்.

வளர்க தமிழ்!           வாழ்க தமிழ்!!

No comments:

Post a Comment