Thursday, April 9, 2020

தமிழ் காட்டும் நெறி

தமிழ் காட்டும் நெறி

புறநானூறு (182)
       
பாடல்

உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவது ஆயினும், இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்!
துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ் எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனையர் ஆகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.

               - கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி

திணை : பொதுவியல் திணை

துறை : பொருண்மொழிக்காஞ்சித் துறை

பாடல் கூறும் நெறி

* அமிழ்தமே கைக்கு கிட்டினாலும் தானாக உண்ணுதல் கூடாது.
* புகழெனில் உயிரும் கொடுக்கலாம்.
* பழியெனில் உலகையே கொடுத்தாலும் பெறக் கூடாது.
* மனம் தளருதல் கூடாது.
* யாரையும் வெறுக்கக் கூடாது.


பாடல் குறிப்பு

பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு (எட்டுத்தொகை).
பாடலை இயற்றியவர் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி. பாடல் எண் 182.

தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளை பின்பற்றுவோம். தமிழிற்க்கு மேலும் அழகு சேர்ப்போம்.

வளர்க தமிழ்!           வாழ்க தமிழ்!!

No comments:

Post a Comment