Tuesday, April 28, 2020

தமிழ் காட்டும் நெறி

தமிழ் காட்டும் நெறி

புறநானூறு (195)

பாடல்:
*******

பல்சான் றீரே! பல்சான் றீரே!
கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்,
பயனில் மூப்பின், பல்சான் றீரே!
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்
பிணிக்கும் காலை, இரங்குவிர் மாதோ;
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்
எல்லாரும் உவப்பது ; அன்றியும்,
நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே.

                - நரிவெரூஉத் தலையார்

திணை: பொதுவியல் திணை

துறை: பொருண் மொழிக் காஞ்சித் துறை

பாடல் கூறும் நெறி:
*********************

* கயல்மீன் முள்ளைப்போல் வெண்மைநிறம் கொண்டிருக்கும் நரைமுடியைக் கன்னமெல்லாம் கொண்டிருக்கும் நல்லவர்களே!

* பிறருக்கும் பயன்படாமல் வாழும் நல்லவர்களே! கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன் உயிரை எடுத்துக்கொள்பவன் உங்களது உயிரைக் சூலம் ஏந்திய பெருந் திறனாளி ஒருவன் வாங்கும்போது “அய்யோ வாங்குகிறானே!” இன்று வருந்துவீர்கள்.

* இப்போது எதற்கும் கவலைப்பட மாட்டீர்கள். இப்போதே நீங்கள் ஒன்று செய்யுங்கள். அதனால் நீங்கள் சாகும்போது கவலை இல்லாமல் இருக்கலாம்.

* உங்களால் நல்லது செய்ய முடியாவிட்டாலும் நல்லது-அல்லாததை செய்வதைத் தவிர்த்துவிடுங்கள். அதுதான் எல்லாரும் மகிழ்வது.

பாடல் குறிப்பு:
***************

இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு (எட்டுத்தொகை). இப்பாடலை இயற்றியவர் நரிவெரூஉத் தலையார். பாடல் எண் 195. இந்நூலில் இடம் பெற்றுள்ள பாடல்கள் புறப்பொருள் சார்ந்தவையாகும்.


தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றுவோம். தமிழிற்கு மேலும் அழகு சேர்ப்போம்!

வளர்க தமிழ்!      வாழ்க தமிழ்!

1 comment:

  1. நல்லுழி யாற்று அல்ல சான்றோர்
    கல்லென கிடப்ப நன்று.
    வடலூர்ஜெகன்

    ReplyDelete