தமிழ் காட்டும் நெறி
புறநானூறு (196)
பாடல்:
*******
ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும்
ஒல்லாது இல்லென மறுத்தலும், இரண்டும்,
ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;
ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது
இல்லென மறுத்தலும், இரண்டும், வல்லே;
இரப்போர் வாட்டல் அன்றியும், புரப்போர்
புகழ்குறை படூஉம் வாயில் அத்தை
அனைத்தா கியர், இனி; இதுவே எனைத்தும்
சேய்த்துக் காணாது கண்டனம் ; அதனால்,
நோயிலர் ஆகநின் புதல்வர்; யானும்,
வெயிலென முனியேன், பனியென மடியேன்,
கல்குயின் றன்னஎன் நல்கூர் வளிமறை,
நாணலது இல்லாக் கற்பின் வாணுதல்
மெல்லியல் குறுமகள் உள்ளிச்
செல்வல் அத்தை ; சிறக்க, நின் நாளே!
- அவூர் மூலங்கிழார்
திணை: பொதுவியல் திணை
துறை: பரிசில் கடா நிலை துறை
பாடல் கூறும் நெறி:
*********************
* பாண்டியன் புலவருக்குப் பரிசில் தருவதற்குக் காலம் கடத்திவந்தான். இது முறையன்று என்று புலவர் எடுத்துக்கூறும் பாடல் இது. வழங்காதவனையும் வாழ்த்துகிறார் புலவர்.
* ஒன்றைச் செய்ய முயலும்போது தன்னால் செய்யமுடிவதைச் செய்யமுடியும் என்று கூறுவதும், செய்ய முடியாததைச் செய்யமுடியாது என்று வெளிப்படையாக மறுத்தலும் எல்லாரும் சொல்லக்கூடியதுதான்.
* அப்படிச் சொல்வதை விட்டுவிட்டு, செய்ய முடியாததை முடியும் என்று சொல்லிக்கொண்டு காலம் கடத்தலும், கொடுக்க முடிவதை இல்லை எனக் கூறி மறுத்தலும் ஆகிய இரண்டும் உதவி கேட்போரை வாடச்செய்வது ஆகும்.
* அன்றியும், கொடுத்துக் காப்பாற்றுபவரின் புகழை மங்கச்செய்யும் செயலாகும். அத்தை, எல்லாம் முடிந்துவிட்டது. இனிக் காத்திருந்தாலும் இதுதான் நடக்கப்போகிறது. எல்லாவற்றையும் தொலைநூரத்தில் பார்க்கிறேன்.
பாடல் குறிப்பு:
***************
இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு (எட்டுத்தொகை). இப்பாடலை இயற்றியவர் அவூர் மூலங்கிழார். பாடல் எண் 196. இந்நூலில் இடம் பெற்றுள்ள பாடல்கள் புறப்பொருள் சார்ந்தவையாகும்.
தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றுவோம். தமிழிற்கு மேலும் அழகு சேர்ப்போம்!
வளர்க தமிழ்! வாழ்க தமிழ்!
புறநானூறு (196)
பாடல்:
*******
ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும்
ஒல்லாது இல்லென மறுத்தலும், இரண்டும்,
ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;
ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது
இல்லென மறுத்தலும், இரண்டும், வல்லே;
இரப்போர் வாட்டல் அன்றியும், புரப்போர்
புகழ்குறை படூஉம் வாயில் அத்தை
அனைத்தா கியர், இனி; இதுவே எனைத்தும்
சேய்த்துக் காணாது கண்டனம் ; அதனால்,
நோயிலர் ஆகநின் புதல்வர்; யானும்,
வெயிலென முனியேன், பனியென மடியேன்,
கல்குயின் றன்னஎன் நல்கூர் வளிமறை,
நாணலது இல்லாக் கற்பின் வாணுதல்
மெல்லியல் குறுமகள் உள்ளிச்
செல்வல் அத்தை ; சிறக்க, நின் நாளே!
- அவூர் மூலங்கிழார்
திணை: பொதுவியல் திணை
துறை: பரிசில் கடா நிலை துறை
பாடல் கூறும் நெறி:
*********************
* பாண்டியன் புலவருக்குப் பரிசில் தருவதற்குக் காலம் கடத்திவந்தான். இது முறையன்று என்று புலவர் எடுத்துக்கூறும் பாடல் இது. வழங்காதவனையும் வாழ்த்துகிறார் புலவர்.
* ஒன்றைச் செய்ய முயலும்போது தன்னால் செய்யமுடிவதைச் செய்யமுடியும் என்று கூறுவதும், செய்ய முடியாததைச் செய்யமுடியாது என்று வெளிப்படையாக மறுத்தலும் எல்லாரும் சொல்லக்கூடியதுதான்.
* அப்படிச் சொல்வதை விட்டுவிட்டு, செய்ய முடியாததை முடியும் என்று சொல்லிக்கொண்டு காலம் கடத்தலும், கொடுக்க முடிவதை இல்லை எனக் கூறி மறுத்தலும் ஆகிய இரண்டும் உதவி கேட்போரை வாடச்செய்வது ஆகும்.
* அன்றியும், கொடுத்துக் காப்பாற்றுபவரின் புகழை மங்கச்செய்யும் செயலாகும். அத்தை, எல்லாம் முடிந்துவிட்டது. இனிக் காத்திருந்தாலும் இதுதான் நடக்கப்போகிறது. எல்லாவற்றையும் தொலைநூரத்தில் பார்க்கிறேன்.
பாடல் குறிப்பு:
***************
இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு (எட்டுத்தொகை). இப்பாடலை இயற்றியவர் அவூர் மூலங்கிழார். பாடல் எண் 196. இந்நூலில் இடம் பெற்றுள்ள பாடல்கள் புறப்பொருள் சார்ந்தவையாகும்.
தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றுவோம். தமிழிற்கு மேலும் அழகு சேர்ப்போம்!
வளர்க தமிழ்! வாழ்க தமிழ்!
இயலா தென்பதை இயலுமென் றேமாற்றி
ReplyDeleteகாலம் கடந்தார் வேந்தன்.
வடலூர்ஜெகன்