Monday, April 13, 2020

தமிழ் காட்டும் நெறி

தமிழ் காட்டும் நெறி

புறநானூறு  (183)
         
பாடல்

உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்,
பிற்றைநிலை முனியாது, கற்றல் நன்றே!
பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும்,
சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்;
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்,மூத்தோன் வருக என்னாது, அவருள்
அறிவுடை யோன் ஆறு அரசும் செல்லும்;
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்,
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே,

               - ஆரிய படை கடந்த நெடுஞ்செழியன்

திணை : பொதுவியல்திணை

துறை : பொருண்மொழி காஞ்சித் துறை

பாடல் கூறும் நெறி

*ஆசிரியருக்குத் துன்பம் நேரும்போது உதவ வேண்டும்.
*அவருக்கு நிறைந்த செல்வம் கொடுக்கவேண்டும்.
*அவரைப் பின்பற்றி நடப்பதற்குத் தயங்கக் கூடாது.
*இப்படிக் கல்வி கற்பது முறையாகும்.
*இதுவே பெரிதும் நன்மை பயக்கும்.

பாடல் குறிப்பு

பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு  (எட்டுத்தொகை).
பாடலை இயற்றியவர்  ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்.
 பாடல் எண் 183.

தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளை பின்பற்றுவோம். தமிழிற்க்கு மேலும் அழகு சேர்ப்போம்.

வளர்க தமிழ்!           வாழ்க தமிழ்!!

No comments:

Post a Comment