எட்டுத் தொகை நூல்களுள் ஒன்றான ஐங்குறுநூறு நூலினைப் பற்றிய தகவல்கள்:
ஐங்குறுநூறு
**************
ஐந்து + குறு = ஐந்திணைகளைக்குறித்த குறும்பாடல்கள்
ஐந்து + நூறு = 500 பாடல்களைக்கொண்டது.
இந்நூலானது ஐந்திணையில் உள்ள அரசனையும் மக்களையும் அவர்களது சிறப்புகளையும் கூறும் நூலாகும்....
இந்த நூலில் உள்ள பாடல்கள் குறைந்த அளவாக *மூன்று அடிகளும்*
உயர்ந்த அளவாக *ஆறு அடிகளும்* கொண்டவை.
இந்நூல் 500 குறும்பாடல்களால் ஆனது.
ஒவ்வொரு திணைக்கும் *நூறு* பாடல்கள் உள்ளன.
ஒவ்வொன்றையும் ஒவ்வொருவர் பாடியுள்ளனர்.
ஒவ்வொரு *நூறுபாடல்களும் பத்துப் பத்துக்களைக்* கொண்டுள்ளது.
ஒவ்வொரு பத்தும் ஒரு பெயர் பெறுவது சிறப்பு.
( கருப்பொருள், உரிப்பொருள், பேசும் பாத்திரம், கேட்கும் பாத்திரம் முதலியவற்றுள் ஏதேனும் ஒன்று அப்பெயர்க்கு அடிப்படையாக அமையும். )
இதற்கும் பாரதம் பாடிய பெருந்தேவனார் *கடவுள் வாழ்த்து* இயற்றியுள்ளார்.
இதனைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய *கூடலூர்கிழார்* .
தொகுப்பித்தவர் *யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை* என்பவர்.
இதன் 129, 130 ஆம் செய்யுட்கள் ( பாடல்கள் ) கிட்டவில்லை.
இதில் மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்ற முறையில் திணைகள் கோக்கப்பட்டுள்ளன.
இதனை இயற்றியோர் பற்றிய விவரம் வருமாறு:
மருதம் - ஓரம்போகியார்
நெய்தல் - அம்மூவனார்
குறிஞ்சி - கபிலர்
பாலை - ஓதலாந்தையார்
முல்லை - பேயனார்
இதில் பல புதுமைகள் உண்டு.
இதில் தொண்டிப்பத்து என்னும் பகுதி *அந்தாதியாகவுள்ளது* .
மேலும் இயற்கைப்புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம், பாங்கியிற் கூட்டம் என்ற கிளவிகளும் ( சொற்களும் ) தொடர்ச்சியாக உள்ளன.
இதில் உள்ளுறையும் இறைச்சியும் மிகுதி. அவ்வாறே புதிய கிளவிகளும் பலவாக அமைந்துள்ளன.
ஒரு **குறிப்பிட்ட அரசனை வாழ்த்திப் பாடும்* போக்கை இந்நூலில் மட்டுமே காண முடியும்.
‘ **வாழி ஆதன் வாழி அவினி!* ’ என்ற அடி
பாடல்தோறும் இடம் பெறலை வேட்கைப் பத்தில் காணலாம்.
நாட்டில் பசியும் பிணியும், வறுமையும், அறமற்ற செயல்களும் இல்லாது ஒழியவும்,
அன்பும் அறமும், ஒழுக்கமும், செல்வ வளமும் பெருகவேண்டும் **என
வேண்டும் பெண்களை** இந்நூலிலன்றி வேறெதிலும் காண முடியாது.
எ.கா ;
தன் கணவன் ஊரில் ( பாலை நிலத்தில் ) உள்ள கிணற்றடியில் கிடக்கும் *அழுகல் நீர்* , தன் தாய் வீட்டில்
தான் உண்ட தேன்கலந்த *பாலை விட* இனிமையாகக் கருதும் பெண்ணைக்
*கபிலர்* அறிமுகப்படுத்துகின்றார்.
( பாடல் : 203 )
ஐங்குறுநூறு
**************
ஐந்து + குறு = ஐந்திணைகளைக்குறித்த குறும்பாடல்கள்
ஐந்து + நூறு = 500 பாடல்களைக்கொண்டது.
இந்நூலானது ஐந்திணையில் உள்ள அரசனையும் மக்களையும் அவர்களது சிறப்புகளையும் கூறும் நூலாகும்....
இந்த நூலில் உள்ள பாடல்கள் குறைந்த அளவாக *மூன்று அடிகளும்*
உயர்ந்த அளவாக *ஆறு அடிகளும்* கொண்டவை.
இந்நூல் 500 குறும்பாடல்களால் ஆனது.
ஒவ்வொரு திணைக்கும் *நூறு* பாடல்கள் உள்ளன.
ஒவ்வொன்றையும் ஒவ்வொருவர் பாடியுள்ளனர்.
ஒவ்வொரு *நூறுபாடல்களும் பத்துப் பத்துக்களைக்* கொண்டுள்ளது.
ஒவ்வொரு பத்தும் ஒரு பெயர் பெறுவது சிறப்பு.
( கருப்பொருள், உரிப்பொருள், பேசும் பாத்திரம், கேட்கும் பாத்திரம் முதலியவற்றுள் ஏதேனும் ஒன்று அப்பெயர்க்கு அடிப்படையாக அமையும். )
இதற்கும் பாரதம் பாடிய பெருந்தேவனார் *கடவுள் வாழ்த்து* இயற்றியுள்ளார்.
இதனைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய *கூடலூர்கிழார்* .
தொகுப்பித்தவர் *யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை* என்பவர்.
இதன் 129, 130 ஆம் செய்யுட்கள் ( பாடல்கள் ) கிட்டவில்லை.
இதில் மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்ற முறையில் திணைகள் கோக்கப்பட்டுள்ளன.
இதனை இயற்றியோர் பற்றிய விவரம் வருமாறு:
மருதம் - ஓரம்போகியார்
நெய்தல் - அம்மூவனார்
குறிஞ்சி - கபிலர்
பாலை - ஓதலாந்தையார்
முல்லை - பேயனார்
இதில் பல புதுமைகள் உண்டு.
இதில் தொண்டிப்பத்து என்னும் பகுதி *அந்தாதியாகவுள்ளது* .
மேலும் இயற்கைப்புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம், பாங்கியிற் கூட்டம் என்ற கிளவிகளும் ( சொற்களும் ) தொடர்ச்சியாக உள்ளன.
இதில் உள்ளுறையும் இறைச்சியும் மிகுதி. அவ்வாறே புதிய கிளவிகளும் பலவாக அமைந்துள்ளன.
ஒரு **குறிப்பிட்ட அரசனை வாழ்த்திப் பாடும்* போக்கை இந்நூலில் மட்டுமே காண முடியும்.
‘ **வாழி ஆதன் வாழி அவினி!* ’ என்ற அடி
பாடல்தோறும் இடம் பெறலை வேட்கைப் பத்தில் காணலாம்.
நாட்டில் பசியும் பிணியும், வறுமையும், அறமற்ற செயல்களும் இல்லாது ஒழியவும்,
அன்பும் அறமும், ஒழுக்கமும், செல்வ வளமும் பெருகவேண்டும் **என
வேண்டும் பெண்களை** இந்நூலிலன்றி வேறெதிலும் காண முடியாது.
எ.கா ;
தன் கணவன் ஊரில் ( பாலை நிலத்தில் ) உள்ள கிணற்றடியில் கிடக்கும் *அழுகல் நீர்* , தன் தாய் வீட்டில்
தான் உண்ட தேன்கலந்த *பாலை விட* இனிமையாகக் கருதும் பெண்ணைக்
*கபிலர்* அறிமுகப்படுத்துகின்றார்.
( பாடல் : 203 )
தேடல் அருமை
ReplyDeleteவாழ்த்துக்கள்
வடலூர்ஜெகன்