தமிழ் காட்டும் நெறி
புறநானூறு (187)
பாடல்:
*******
நாடா கொன்றோ ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ ; மிசையா கொன்றோ;
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை ; வாழிய நிலனே!
- ஔவையார்
திணை: பொதுவியல் திணை
துறை: பொருண் மொழிக் காஞ்சித் துறை
பாடல் கூறும் நெறி:
*********************
* நாடாய் இருந்தால் என்ன?
காடாய் இருந்தால் என்ன?
பள்ளமாய் இருந்தால் என்ன?
மேடாய் இருந்தால் என்ன?
* எங்கே ஆண்கள் நல்லவர்களாக இருக்கிறார்களோ அந்த நிலம் வாழ்வதற்கு உரிய நல்ல இடம்.
பாடல் குறிப்பு:
***************
இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு (எட்டுத்தொகை). இப்பாடலை இயற்றியவர் ஔவையார். பாடல் எண் 187. இந்நூலில் இடம் பெற்றுள்ள பாடல்கள் புறப்பொருள் சார்ந்தவையாகும்.
தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றுவோம். தமிழிற்கு மேலும் அழகு சேர்ப்போம்!
வளர்க தமிழ்! வாழ்க தமிழ்!
புறநானூறு (187)
பாடல்:
*******
நாடா கொன்றோ ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ ; மிசையா கொன்றோ;
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை ; வாழிய நிலனே!
- ஔவையார்
திணை: பொதுவியல் திணை
துறை: பொருண் மொழிக் காஞ்சித் துறை
பாடல் கூறும் நெறி:
*********************
* நாடாய் இருந்தால் என்ன?
காடாய் இருந்தால் என்ன?
பள்ளமாய் இருந்தால் என்ன?
மேடாய் இருந்தால் என்ன?
* எங்கே ஆண்கள் நல்லவர்களாக இருக்கிறார்களோ அந்த நிலம் வாழ்வதற்கு உரிய நல்ல இடம்.
பாடல் குறிப்பு:
***************
இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு (எட்டுத்தொகை). இப்பாடலை இயற்றியவர் ஔவையார். பாடல் எண் 187. இந்நூலில் இடம் பெற்றுள்ள பாடல்கள் புறப்பொருள் சார்ந்தவையாகும்.
தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றுவோம். தமிழிற்கு மேலும் அழகு சேர்ப்போம்!
வளர்க தமிழ்! வாழ்க தமிழ்!
தீதுமழி யுங்குழி மேடாகுங் கனிஈயும்
ReplyDeleteகாடும் நனியா ணுறைமண்.
வடலூர்ஜெகன்